ஞகரம் முதல் னகரம் ஈறாகிய மெல்லெழுத்து ஐந்தும், வருமொழி வன்கணம்வருமிடத்தே மெய்பிறிதாதல் முத லான ஏற்ற திரிபுகளைப் பெற்றுவருமொழியோடு ஒட்டியிசைக்கும் வனப்பு இயைபு எனப்படும்.(தென்.யாப்.96)எ-டு : உரி ஞு க் கொண்டனன், முரணுத் தொலைத்த,பொரு ந க் கடுமையின், வீழ்மர ங் கடுப்ப,செம்பொ ற் குடத்தர்.(தென். யாப். 96)