இயைபு என்ற வனப்பின் இலக்கணம்

மொழியிறுதிக்கண் நிற்றற்குரிய ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்என்னும் புள்ளி எழுத்துக்கள் நாற்கணத்தொடும் புணருங்கால் புணரியல்விதிதவறாமல் இயைபுபட்டு நிற்கும் வனப்பு இயைபு எனப்படும்.பாட்டு முதலாகிய எழுவகைச் செய்யுள்களைச் சொற் பொருள்விளங்கவேண்டும் என்று கருதிப் புணர்ச்சியின்றிச் சொல்லுதலும்எழுதுதலும் சிலரது வழக்காதலின், ஆண்டுப் புணர்ச்சியின்றி விட்டிசைத்துஓசையியைபு அழியுமன்றே? அங்ஙனம் ஓசை அழியாமற் செய்தல்இவ்வுறுப்பாம்.எ-டு : ‘கண்டா ங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தா ங் காட்ட யா ங் கண் டது’ (குறள். 1171)(தொ. செய். 239 ச.பால.)