இயைபுத்தொடை

அடிதோறும் இறுதிக்கண் எழுத்தாவது சொல்லாவது ஒன்றிவரின் அஃது (அடி)இயைபுத்தொடையாம். இனி, ஓரடியுள்ளே கடையிணை முதலாக இயைபுத்தொடைவிகற்பம் கொள்ளப்படும் தொடைவிகற்பம் அளவடிக் கண்ணேயே கொள்ளப்படும்.இயைபுத்தொடையின்கண் இறுதிச்சீர் முதலாகக் கொண்டு இணை, பொழிப்பு முதலானதொடைவிகற்பம் காண்டல் வேண்டும்; அடி யியைபும் காணப்படும்.எ-டு : ‘மாயோள் கூந்தல் குரலும் நல்ல கூந்தலின் வேய்ந்த மலரும் நல்ல ’என அடி இயைபுத் தொடையும்‘மொய்த்துடன் தவழும் முகி லே பொழி லே’என ஓரடிக்கண்ணேயே இணைஇயைபுத்தொடையும் வந்தவாறு. (யா. க. 40உரை)இயைபுத்தொடை எழுத்தோ சொல்லோ ஒன்றி வரப் பெறும் (சாமி. 154)இயைபுத்தொடை எழுத்தோ அசையோ ஒன்றிவரப்பெறும் (மு. வீ. யாப்பு. 25)(யா. வி. 40 உரை)