ஈற்றடி குறையாத பல தாழிசையால் வரும் கொச்சக்கலி.எ-டு : ‘தண்மதியேர்’ எனத் தொடங்கும் கலிப்பா.இப்பாடல் சிறப்புடைத் தன்தளையால் நாலடித்தரவும், அடுத்துஇரண்டடித் தாழிசை ஆறும், அடுத்துத் தனிச் சொல்லும் பெற்று, நாலடிஆசிரியச் சுரிதகத்தால் இற்றது. தாழிசை மூன்றின் மிக்குப் பலவாய்வந்தமையின் இயல் பஃறாழிசைக் கொச்சகம் ஆயிற்று. (யா. க. 86 உரை)