பிற கலி உறுப்புக்களைப் பெறாமல் தரவு மாத்திரமாய் வருவது இயல் தரவுகொச்சகமாம்.எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழிமுல்லைத்தார் முடிமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.’இது வெண்சீர் வெண்டளையும் கலித்தளையும் விரவி வந்தமையால் அகவல்துள்ளலோசை பெற்ற இயல் தரவு கொச்சகம். (யா. க. 86 உரை)