இயலசையும் உரியசையும் சீர்களாகவருதல்

இயலசை இரண்டும் வெண்பாவின் ஈற்றடி இறுதிச்சீராக வரும்; சிறுபான்மைகலிப்பாவின் அம்போதரங்க உறுப்பி னுள் சீராக வரும்; பெரும்பான்மையும்முதல் இறுதிக்கண் கூனாக அன்றி வாரா. உரியசைகள் அடி மூவிடத்தும் ஏற்றபெற்றி சீராக வரும்.எ-டு : ‘கழல்தொழா மன்னர்தம் கை ’‘நற்றாள் தொழாஅ ரெனின் ’ (குறள் – 2)‘பகவன் முதற்றே யுலகு ’ (குறள். 1)‘தானமிழ்தம் என்றுணரற் பாற்று ’ (குறள் – 11)‘ முழங்கு முந்நீர் முழுதும் வளைஇ’‘கறவை தந்து பகைவ ரோட்டிய’ (புறநா. 204)‘வென்றி தந்து கொன்று கோள் விடுத்து ’ (புறநா. 260)(தொ. செய். 27 ச.பால.)