இயற்சீர்

நேர் நிரை என்னும் இயலசை இரண்டும் தம்மொடு தாமும், தம்மொடு பிறவும்மயங்கும்போது நேர்நேர், நிரை நிரை, நேர்நிரை, நிரை நேர் என்றுமயங்கித் தேமா கருவிளம் கூவிளம் புளிமா என்னும் வாய்பாடுகளால்வழங்கப்பெறும். இவற்றுள் கருவிளமும் கூவிளமும் முறையே கணவிரி பாதிரிஎனவும் வழங்கப்பெறும்.எ-டு : ‘கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை’தேமா கருவிளம் புளிமா கூவிளம் (குறுந். 216)என ஓர் அகவல்அடியில் இயற்சீர் நான்கும் வந்தன.(தொ. செய். 13 நச்.)