இன்னிசை

இன்னிசை வெண்பா. இஃது ஒருவிகற்பமாகித் தனிச்சீர் இன்றியும்,இருவிகற்பமாகித் தனிச்சீர் இன்றியும், தனிச்சீர் பெற்றுப் பலவிகற்பமாகியும், தனிச்சீர் இன்றிப் பல விகற்ப மாகியும், அடிதோறும்ஒரூஉத்தொடை பெற்றும், நேரிசை வெண்பாவின் சிறிது வேறுபட்டு நான்கடியாய்இவ்வாறு பல வகையான் நிகழும்.எ-டு : ‘துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்கஅகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்சகடக்கால் போல வரும்.’ (நாலடி. 2)இஃது இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சீர் இன்றி வந்தது.எ-டு : ‘வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லைஅளந்தன போகம் அவரவர் ஆற்றான்விளங்காய் திரட்டினார் இல்லைக் – களங்கனியைக்காரெனச் செய்தாரு மில்.’ (நாலடி. 103)இஃது இரண்டாமடியின் இறுதியில் தனிச்சீர் இன்றி ஆனால் மூன்றாம் அடிஇறுதியில் அது பெற்று வந்த இன்னிசை வெண்பா.எ-டு : ‘தலைக்கண் தலைஐந்தும் காணேன் கடைக்கணேல்என்னா இருவரும் ஈங்கில்லை – பொன்னோடைஆழியாய்! நன்மை அறிந்தேன் அலைகடல்சூழ்ஏழியான் இக்கிடந்த ஏறு.’இஃது இரண்டாமடி இறுதியில் ஒரூஉஎதுகை பெற்று மூன்று விகற்பத்தால்வந்தது.எ-டு : ‘தேனார் மலர்க்கூந்தல் தேமொழியாய்! – மேனாள்பொருளைப் பொருளென்று நம்மறந்து போனார்உருடேர் மணியோசை யோடும் – இருடூங்கவந்த திதுவோ மழை.’இஃது இரண்டாமடி இறுதியில் தனிச்சீர் பெறாது முதலடி இறுதியில்ஒரூஉஎதுகை பெற்று மூன்றாம் அடி இறுதியிலும் அவ்வெதுகை பெற்று மூன்றுவிகற்பத்தான் வந்தது.எ-டு : ‘கடற்குட்டம் போழ்வர் கலவர் – படைக்குட்டம்பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோமில்தவக்குட்டம் தானுடையான் நீந்தும் – அவைக்குட்டம்கற்றான் கடந்து விடும்!’ (நான்மணி. 16)இஃது இரண்டாமடி இறுதியில் தனிச்சீர் பெறாது முதலாம் மூன்றாமடிக்கண்இறுதிச்சீர் ஒரூஉஎதுகை பெற்று நான்கு விகற்பத்தால் வந்தது; இரண்டாமடிஇறுதிச்சீரும் ஒரூஉ எதுகை பெற்ற தெனினும் இழுக்காது. (யகர ஆசு இடையிட்டது.)எ-டு : ‘மழையின்றி மாநிலத்தார்க் கில்லை; – மழையும்தவமிலார் இல்வழி இல்லை; – தவமும்அரசிலார் இல்வழி இல்லை; – அரசனும்இல்வாழ்வார் இல்வழி இல்.’ (நான்மணி. 46)இஃது அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்றுப் பல விகற்பத்தால் வந்தது.‘அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார் தெருமருந்துதேய்வர் ஒருமா சுறின்’ (நாலடி 151)இஃது இரண்டாமடியின் இறுதியில் தனிச்சீர் பெற்று மூன்றுவிகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா.‘உறுபுனல் தந்துல கூட்டி – அறுமிடத்தும்கல்லுற் றுழியூறும் ஆறேபோல் – செல்வம்பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் – சிலர்க்காற்றிச்செய்வர் செயற்பா லவை.’ (நாலடி. 185)இஃது ஈற்றடி ஒழித்து ஏனையடிகள் ஒரூஉத்தொடை பெற்று வந்தது[ இவற்றைத் தனிச்சொல் என்னும் வீரசோழிய உரைகா. 114 ] (யா. க. 61 உரை, யா. கா. 25 உரை)