மூன்றடியாய் இன்னிசை வெண்பாப் போலவே தனிச்சீர் இன்றி ஒருவிகற்பமாகியும் இருவிகற்ப மாகியும் பல விகற்ப மாகியும் வரும் வெண்பா.‘நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப்பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரிபறநாட்டுப் பெண்டிர் அடி’ (யா. கா. 25 மேற்.)‘உம்பர் பெருமாற்(கு) ஒளிர்சடிலம் பொன்பூத்ததம்பொற் புயம்வேட்டேம் தார்முலையும் பொன்பூத்தபொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்து’ (சி.செ. கோ. 27)‘முல்லை முறுவலித்துக் காட்டின; – மெல்லவேசேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற; – போயினார்திண்டேர் வரவுரைக்கும் கார்’ (யா.கா. 25 மேற்.)இவை மூன்றும் முறையே ஒன்று இரண்டு பல எனும் விகற்பத் தால் வந்தஇன்னிசைச் சிந்தியல் வெண்பா. (இரண்டாம் சிந்தியல் வெண்பாவினை மெல்லினஅடியெதுகை எனக் கொள்ளாது இருவிகற்பமாகக் கொள்க. மூன்றாவதன்கண், முதலடிஇறுதிச் சீரும் இரண்டாமடி இறுதிச்சீரும் ஒரூஉ எதுகை பெற்றன.)