இந்திர கணம்

செய்யுட் கணங்களுள் ஒன்று. இதனைச் சுவர்க்க கணம் என்றும் கூறுப.கணப்பொருத்தம் மூவசைச் சீர்க்கே சிறப் பாகக் கொள்ளப்படும். முற்றும்நேராகிய தேமாங்காய் இந்திர கணமாம். இதற்குரிய நாள் பரணி என்றார்இந்திர காளியர். இதன் பலன் பெருக்கம் செய்தல் என்றார் மாமூலர். இன்பம்செய்தல் என்றார் இந்திரகாளியர். ஆகவே முதற் சீர்க்கு எடுத்த சீர்களுள்இதுவும் ஒன்று.(இ.வி.பாட். 40 உரை)