இதழ் குவிந்த ஓட்டியம்

மேலுதடும் கீழுதடும் குவிந்து ஒலிக்கும் உயிர்எழுத்துக்க ளாகிய உ ஊஒ ஓ ஒள என்னும் உயிரொடு கூடிய மெய் யெழுத்துக்களே அமையப் பாடும்சொல்லணி இதழ் குவிந்த ஓட்டியம்.எ-டு : ‘குருகு குருகு குருகொடு கூடுகுருகுகுரு கூருளுறு கோ’‘குருகு குருகொடு(ம்), குருகுகுருகொடு(ம்) கூடும் குருகூருள் கோ உறு’ என்க.‘சங்கு சங்கோடும், குருகு என்னும் பறவை குருகுகளோடும் திரண்டுஇயங்கும் குருகூரின் தலைவன் ஆன சடகோபனை நினைப்பாயாக’ என்ற பொருளமைந்தஇப்பாடலின், உ ஊ ஓ என்னும் உயிர்கள் கூடின உயிர்மெய்யெழுத்துக்களே வந்துள்ளமையால், இவையாவும் உதடு குவிந்து ஒலிக்கப்படு தலின் இஃது இதழ்குவிந்த ஓட்டியம் என்னும் சொல்லணி பெற்றுள்ளது. ஓட்டம் – உதடு;ஓட்டியம் – உதட்டொடு தொடர்புடைய எழுத்துக்களாலே அமைந்த பாடல்.(மா. அ. பா. 771)