இணைமணிமாலை

வெண்பாவும் அகவலும், வெண்பாவும் கலித்துறையுமாக இரண்டிரண்டாகஇணைத்து, வெண்பாஅகவல் இணை மணி மாலை, வெண்பாக்கலித்துறை இணைமணிமாலை எனநூறு நூறு அந்தாதித்தொடையாக வரப் பாடுவது இணை மணிமாலை என்னும்பிரபந்தத்து இலக்கணமாம். முதற் பாடலின் முதற்சீரும் இறுதிப் பாடலின்இறுதிச்சீரும் மண்டலித்து வருதல் அந்தாதித் தொடையால் அமைந்தபிரபந்தங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். (இ. வி.பாட். 58)