இடையின எதுகை

அடிதோறும் முதலெழுத்து அளவொத்திருப்ப இரண்டாம் எழுத்தாகிய மெய்இடையினமெய்யாக இருப்பின் அவ் வெதுகை இடையின எதுகையாம்.எ-டு : ‘எ ல் லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொ ய் யா விளக்கே விளக்கு’இதில் எ ல் லா, பொ ய் யா இடையின எதுகை அடியெதுகை யாக வந்தது. (யா. க. 37உரை)