அடிதோறும் முதலெழுத்து மாத்திரம் ஒன்றிவரத் தொடுப் பது இடையாகுமோனையாம்.எ-டு : ‘ மா வும் புள்ளும் வதிவயின் படர மா நீர் விரிந்த பூவும் கூம்ப………………………………………………. மா யோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே’அடிதோறும் ‘மா’ என்னும் முதலெழுத்து மாத்திரம் ஒன்றி வரத்தொடுத்தமையால் இப்பாடல் இடையாகு மோனை (அடிமோனை) ஆம். (யா. க. 37உரை)