தெரிநிலை, தேற்றம், ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம்,வினா, விழைவு, ஒழியிசை, பிரிப்பு, கழிவு, ஆக்கம் என்னும் பதினான்கும்பிறவும் இடைச்சொற்குப் பொருளாம். ‘இன்னன’ என்றதனான் சில இடைச்சொற்கள்வருமாறு:தொறு தோறு ஞெரேர் அந்தோ அன்னோ கொல்லோ ஆ ஆவா அஆ இனி என் ஏன் ஏதில் நகல் ஒல் கொல் துடும் துண் பொள் கம் கொம் – என்பன.இவற்றுள், தொறு தோறு – என்பன தாம் புணர்ந்த மொழிப் பொருண்மையினைப்பலவாக்கி ஆங்காங்கு என்பது பட நிற்கும்.எ-டு : ‘குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே’ (முருகு.217)ஞெரேர் என்பது வெருவுதல் பொருளில் வரும்.எ-டு : ‘ஞெரேரெனத், தலைக்கோள் வேட்டம் களிறட் டாஅங்கு’ (பொருந.141)அந்தோ, அன்னோ, கொல்லோ, ஆ, ஆவா, அஆ – என்பன இரக்கம் குறித்துவரும்.எ-டு : ‘அந்தோ விசயை பட்டனள்’ சீவக. 312‘அரக்காம்பல் நாறும்வாய்அம்மருங்குற்கு அன்னோபரற்கானம் ஆற்றின கொல்லோ’ நாலடி 396‘ ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ’ புற. 235‘ஆஅ அளிய அலவன்தான்பார்ப்பினோடு’‘ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார்ஒருசாரா ர் ’‘அஆ, இழந்தான்என் றெண்ணப்படும்’ நாலடி 9இனி என்றது, காலத்தின்மேலும் இடத்தின்மேலும் முன் என்பது படவரும்.‘அளிதோ தானே நாணேநம்மொடுநனிநீ டுழந்தன்று மன்னே இனியே’ (குறுந். 149)என் என்பது சொல்லுதல் என்னும் தொழில் குறித்துப் பெயர்வினைகட்குரிய விகுதிகளுடனே வரும்.எ-டு : ‘எண் என்ப ஏனை எழுத் தென்ப இவ்விரண்டும்கண் என்ப வாழும் உயிர்க்கு’ (கு. 392)‘மிடி என்னும் காரணத்தின் மேன் முறைக் கண்ணேகடி என்றார் கற்றறிந் தார்’ (நாலடி 56)ஏன் என்பது ஒழிதல்பொருள் குறித்து வரும்.எ-டு : ஏனோன், ஏனோள், ஏனோர், ஏனது, ஏனவை, ஏனைய,ஏனுழிஏதில் என்பது அயல் என்னும் பொருள் குறித்து வரும்.எ-டு : ஏதிலான், ஏதிலாள், ஏதிலார், ஏதிலது, ஏதில.ந என்பது சிறப்புப் பொருட்டு; பெயர்முன் அடுத்து வரும்.எ-டு : நக்கீரர், நச்செள்ளையார், நப்பாலத்தனார், நப்பிஞ்ஞை,நந்நாகனார், நக்கடகம்கல் என்றது முதல் நான்கும் ஓசைப்பொருள்மேல் வரும்.எ-டு : ‘கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தலின்’ (கலி. 5)‘ஒல்லென்று ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு’ (ஐந். ஐம். 28)‘புள்ளும் கொல்லென ஒலிசெய்யும்’‘நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து’ (புற. 243)துண் என்றது முதல் நான்கும் குறிப்புப்பொருள்மேல் வரும்.எ-டு : ‘ துண்ணென்னும் நெஞ்சமொடு’‘பொள்ளென ஆங்கே புறம்வேரார்’ (கு. 487)‘எம்மொடு கழிந்தன ராயின் கம்மென’ (அக. 11)‘கொட்புறு நெஞ்சின் கொம்மென உராஅய்’ நன். 420 மயிலை.பிற பொருள்களாவன :அக்கொற்றன், எக்கொற்றன் – என்பன சுட்டுப்பொருளும் வினாப்பொருளும்தந்தன.நக்கீரர், நப்பாலத்தனார் – என்புழி நகர இடைச்சொல் சிறப்புப் பொருள்தந்தது.‘அஆ, இழந்தான்என் றெண்ணப் படும்’ நாலடி. 9‘ஆஅ அளிய அலவன்தன்பார்ப்பினோடு‘அந்தோ விசையை பட்டனள்’ சீவக . 312‘அரக்காம்பல் நாறும்வாய்அம்மருங்கிற்கு அன்னோபரற்கானம் ஆற்றின கொல்லோ’ நாலடி. 396இவை இரங்குதல் பொருள் தந்தன.‘அறிதோறு அறியாமை கண்டற்றால்’ குறள் 1110‘சேரி தோறு இது செல்வத் தியற்கையே’ சீவக. 129தோறு, இடப்பன்மைப் பொருள் தந்தது. ‘தொறு’வும் அது.இனிச் செய்வான், இனி எம் எல்லை – ‘இனி’ காலப்பொரு ளும்இடப்பொருளும் தந்தன. (தொ. சொ. 421 சங்.)