இடைச்சொல் : பொதுஇலக்கணம்

இடைச்சொல்லாவன சொற்புணருமிடத்துச் சாரியையாய் நின்றும், உருபாய்நின்றும், தத்தம் குறிப்பின் பொருள் செய்ய நின்றும், அசைச்சொல்லாய்நின்றும், வினைச் சொற்கு ஈறாய் நின்றும், இசைநிறையாய் நின்றும்நடைபெறுவதல்லது தனித்து நடைபெறுவன அல்ல என்றவாறு. (நேமி. இடை. 1)