இடைச்சொற்கள் பெயர்வினைகளை அடைந்து தம் மருங்கி னான் தோன்றுதலும்,பெயர்வினைகளுடைய மருங்கினான் தோன்றுதலும் என இருவகையவாம்.எ-டு : அதுமன் : மன் என்னும் இடைச்சொல் பெயரின் புறத்தேதோன்றியதுஅவன், உண்டான் : அகரமாகிய சுட்டிடைச் சொல்லும், கால எழுத்தும்ஆண்பால் விகுதியுமாகிய இடைச்சொற்க ளும் முறையே பெயர்வினைகளின் அகத்தேஉறுப்பாய்த் தோன்றின. (தொ. சொ. 162 கல். உரை)