இடைக்குறை

செய்யுட்கண் தொடைசீர் அமைப்புக் கருதி ஒரு பெயர்ப் பகாப்பதம்இடையெழுத்து நீங்க அமைக்கப்பட்டவழியும் தன் பொருளைத் தவறாதுவெளிப்படுத்துவது.‘வேதின வெரிநின் ஓதிமுது போத்து’ ( – குறுந். 140 – 1) என்புழி,ஓந்தி என்பது ஓதி என இடைக்குறைந்து வந்தது. (ஓதி என்பது ஓந்தியின்இயற்பெயர் என்பாரும் உளர்.) (யா. க. 95 உரை)வேண்டாதார் என்பதனை வேண்டார் எனக் கொள்ளும் பகுபதத்தில்ஓரெழுத்துத் தொக்கதனைத் தொகுத்தல் விகாரம் என்று மயிலைநாதர் (நன்.154) குறிப்பிடுவது கொண்டு, இடைக்குறை பெயர்ப் பகாப்பதத்தின்கண்ணதுஎன்பதே பெரும்பாலோர் கருத்து.