எழுத்தல்லாத முற்கு, வீளை முதலாயின செய்யுளில் வந்தால் அவைசெய்யுள்நடை அழியாமல் அசை சீர் தளை முதலா யின பிழையாமல் கொண்டுவழங்கப்படும். இடைக்காடனார் பாடிய ஊசிமுறி இவ்வகைய எழுத்தல்லாத ஓசைசெய்யுள் நடை அழியாவாறு எழுதப்பட்ட யாப்பினை உடையது. விட்டி சைக்கும்தற்சுட்டுக் குறிப்புச்சொற்கும் இவர் பாடலே எடுத்துக் காட்டாகவுள்ளது. (யா. வி. பக். 396, 153)