ஒரு பொருளைக் குறித்தற்குக் கடவுளானும் அறிவுடையோ ரானும் இட்ட
குறியாகிய பெயர் இடுகுறிப் பெயர்; காரணத் தான் வரும் பெயர்
காரணப்பெயர். இவை பல பொருட்கும் பொதுப்பெயராகியும், ஒரு பொருட்குச்
சிறப்புப் பெயராகி யும் வரும்.
எ-டு : மரம் – இடுகுறிப் பொதுப்பெயர்; பனை – இடுகுறிச்
சிறப்புப் பெயர்; அணி – காரணப் பொதுப்பெயர்: முடி – காரணச் சிறப்புப்
பெயர் (நன். 62 சங்கர.)