இடக்கர் அடக்கல்

மூவகைத் தகுதிவழக்கினுள் இதுவும் ஒன்று. இடக்கர் என்பது மறைத்துக்கூற வேண்டிய சொல். இஃது ‘அவையல் கிளவி’ எனவும்படும். இடக்கர் தோன்றாதுஅதனை மறைத்து வேறொரு வாய்பாட்டால் கூறுதல் இடக்கரடக்காம்.எ-டு : ஈகார பகரம், ‘புலிநின்று இறந்த நீரல்ஈரத்து’ (சிறுநீரின் ஈரத்தை நீர்அல் ஈரம் என்றார்) (நன்.267)கண்கழீஇ வருதும், கால்மேல் நீர்பெய்து வருதும், வாய்பூசிவருதும், அந்தி தொழுது வருதும், கைகுறியராய் இருந்தார், பொறைஉயிர்த்தாள் – என்னும் தொடக்கத்தன இடக்கர் அடக்கல். இவைசெய்யுளகத்தும், ‘புலிநின்று இறந்த நீரல்ஈரத்து’ எனவும், ‘கருமுக மந்தி ’ , ‘செம்பின் ஏற்றை’ எனவும் வரும்.‘மருவிய இடக்கரடக்கல்’ காண்க. (நன். 266 மயிலை.)