இஃது ஓர் இசைத்தமிழ் இலக்கணநூல். இடைச் சங்கத் தார்க்கு நூலாகஇருந்தவற்றுள் இதனையும் ஒன்றாக இறை யனார் அகப்பொருள் உரை எண்ணும்.இந்நூல் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் காலம் வரைஇருந்து இறந்தது போலும். இது சிகண்டி ஆசிரியனால் சாரகுமாரன்பொருட்டுச் செய்த இடைச்சங்கத்து வழிநூல் என்ப. (சிலப்.அடியார்க்.உரை)‘முந்து நூல்’ எனப்பட்டவற்றுள் இசை நுணுக்கமும் ஒன்றாகஉரைக்கப்படும். (தொ. சிறப். நச்.)ஆதியின் முனைவன் தமருகத்தினின்று ஆரியத்திற்கு முதல் நூலாகமாகேச்சுர சூத்திரம் தோன்றினாற் போல, அக்காலத் தில் தானே அவனதுவாயினின்று தமிழிற்கு முதல்நூலாக முப்பத்து மூன்று சொற்கள் தோன்றின.அவை நான்கு சூத்திரமாகப் பகுக்கப்பட்டன. அவை நுணுகி ஆராய்ந்த விடத்தே,இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலக்கணமும் முப்பொருளும் முற்றத்தோன்றும் இயல்பினவாயிருந்தமை யால், அச்சூத்திரங்கட்கு ‘இசை நுணுக்கம்’எனப் பெயர் வழங்கிற்று. இசை என்பது சொல். அதுவே தமிழிற்கு இயற்கைமுதல்நூல் எனப்படும். இசைநுணுக்கம் என்னும் பெயரான் இசைத்தமிழேகூறுவதாகிய நூலொன்றுமுண்டு. அது சிகண்டி ஆசிரியனால் சாரகுமாரன்பொருட்டுச் செய்த இடைச்சங்க காலத்து வழிநூல். (பா. வி. பக். 96, 97)