பண்ணும் திறமுமான இராகங்களும் இராக வகைகளும் பொருந்தி, குழலுடனும்யாழுடனும் இசைந்து, தாள வகைகளுடனும் முழவுடனும் சேர்ந்து இசைப்பதாய்,பொரு ளாழம் கொண்ட சொற்கள் புணரப் பாடுவது. இதைக் ‘கீதவுரு’ என்றும்சொல்லுவதுண்டு.கீர்த்தனம் (கீர்த்தனை) எனப்படுவதும் இதனுடன் அடங்கும் பல்லவி,அநுபல்லவி, சரணம் என்பவற்றைப் பெற்றுத் தாளமும் முறையும் வழுவாமல்,இராகதாளம் சேர்ந்து, இசை வல்லுநரால் செய்யப்படும் பாட்டேகீர்த்தனமாவது. அநுபல்லவியின்றி வரும் கீர்த்தனமும் உண்டு.வரிப்பாட்டு என்பதும் இசைப்பாட்டின் வகையே (சிந்து, ஆனந்தக்களிப்பு,கும்பி என்பனவும் இசைப் பாட்டுக்களே) (நாடக. 71-75)