இலக்கணக்கொத்து விளக்கும் அளபெடை வகைகளுள் ஒன்று. மொழியின்முதல்இடைகடைகளில் வரும் குற்றெழுத் தளபெடை, நெட்டெழுத்தளபெடை,ஒற்றெழுத்தளபெடை என்ற மூன்றும், இயற்கையளபெடையும் செயற்கையள பெடையும்எழுத்துப்பேறளபெடையும் இசைநூலளபெடை யும் என நால்வகையாக வரும்.விளி பண்டமாற்று ஆர்த்தல் புலம்பல் முறையிடுதல் – முத லானவிடத்துச்சொற்குப் பின் தோன்றாது கூடப் பிறப்பது இயற்கையளபெடையாம்.எ-டு : ‘உப்போஒஒ என உரைத்து’ ‘அண்ணாவோஒஒஒ’சீர்தளை வழுவினவிடத்துச் சொல் பிறந்த பின் புலவன் பெய்து கொள்ளுதல்செயற்கையளபெடையாம்.எ-டு : ‘நற்றாள் தொழாஅ ரெனின்’ (குறள். 2)எழுத்துப்பேறு (அளபெடை) உயர்மயங்கியல் முதலான இடங்களில் ‘அராஅப் பாம்பு’ முதலான தொகைகளில் காணலாம்.இசையளபெடை வழக்கினுள் காமரத்தாரிடையே (இசை பாடுவோரிடம்) காண்க. (இ.கொ. 90)