இக்குச்சாரியை புணருமாறு

இக்குச்சாரியை இகர ஐகார ஈற்று நிலைமொழிகளொடு புணரும்வழி அது தன்
முதலெழுத்தாகிய இகரம் கெடப் புணரும்; வருமொழி வன்கணம் மிகும்.
எ-டு : ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக் கொண் டான்; சித்திரை
+ இக்கு + கொண்டான் = சித்திரைக் குக் கொண்டான் (தொ. எ. 126, 127
நச்.)