இகர ஈறு தனித்து இயலாமையின் யாதானும் ஒரு மெய் யினை ஊர்ந்து வரும்.
அம்மெய் காலம் காட்டாது; அது காலம் காட்டின் இகர விகுதி காலம்
காட்டாது. (எ-டு: சேறி- இகரம் எதிர்காலம் காட்டிற்று (செல்+த்+இ);
ஆண்டுத் தகரம் காலம் காட்டாமல் நின்றது. அஃது எழுத்துப் பேறாம்.
சென்றி, செல்லாநின்றி- என்புழி இடைநிலைகள் காலம் காட்டின; ஆண்டு
இகரவிகுதி காலம் காட்டாது முன் னிலை யொருமைப் பாலையே சுட்டுவது. (நன்.
145 சங்கர.)