இகரவிகுதி வினைமுதற்பொருண்மை உணர்த்தல்

இகரவிகுதி வினைமுதற்பொருண்மையை உணர்த்துதலைச் சேர்ந்தாரைக் கொல்லி
– நூற்றுவரைக் கொல்லி – நாளோதி – நூலோதி – முதலிய சொற்களில் காணலாம்.
இவற்றுக்கு முறையே தன்னைச் சேர்ந்தவரை அழிப்பது – ஒரேநேரத்தில்
நூறுபேர்களை அழிப்பது – நட்சத்திரங்களைச் சொல்லு பவன் – நூலினை
ஓதுபவன் – என்று பொருள் கூறுக. (சூ. வி. பக். 33)