இகரஈற்று இடைச்சொல் புணர்ச்சி

அதோளி – இதோளி – உதோளி – எதோளி – என்ற இடப் பொருளை உணர்த்தி நின்ற
இகரஈற்று இடைச்சொற்கள், அதோளிக் கொண்டான் என்றாற்போல் வல்லெழுத்து
மிக்கு முடியும். அவ்வழி – இவ்வழி – உவ்வழி – எவ்வழி – என்பன, அவ்வழி
கொண்டான் அவ்வழிக் கொண்டான் என்றாற் போல உறழ்ந்து முடியும்.
இனி – அணி – என்பனவும், சுட்டிடைச்சொல்லும், வன்கணம் வரின் வந்த
வல்லெழுத்து மிக்கு முடியும்.
எ-டு : இனிக்கொண்டான், அணிக்கொண்டான், இக் கொற்றன். (இனி –
இப்பொழுது; அணி – அணிய இடத்து; இ – இவ்விடத்து) (தொ. எ. 159, 236.
நச்).