ஆ, மா, கோ புணருமாறு

ஆ மா கோ என்ற மூன்று பெயர்களுள், ஆ பசுவினை யுணர்த்தும் பெயர்; மா
விலங்கின் பொதுப்பெயர்; கோ இறைவனை யுணர்த்தும் பெயர். இவை உருபுகள்
புணருமிடத்து னகரச்சாரியை பொருந்தவும் பெறும்.
வருமாறு : ஆ + ஐ = ஆவை, ஆ
னை; மா + ஐ = மாவை, மா
னை; கோ + ஐ = கோவை, கோ
னை.
இவை னகரச்சாரியையோடு உகரச்சாரியையும் பெறும்.
எ-டு : நான்கனுருபொடு புணருமிடத்து ஆ
னுக்கு – மா
னுக்கு – கோ
னுக்கு – என வரும். ஆ
வுக்கு – மா
வுக்கு – கோ
வுக்கு – உகரச்சாரியை ஒன்றே
பெறுதல். ஆ
வினுக்கு – மா
வினுக்கு – கோ
வினுக்கு – இன்சாரி- யையும்
உகரச்சாரியையும் பெறுதல். ஆ
வினை, மா
வினை, கோ
வினை என இப்பெயர்கள் இன்னுருபு
ஒழிந்த ஏனை யுருபுகளொடு புணர்கையில் இன் சாரியை பெறுதலும்
கொள்க.
காட்டுப்பசுவைக் குறிக்கும் ஆமா என்ற பெயரும் ஆமானை, ஆமாவினை,
ஆமானுக்கு, ஆமாவினுக்கு என னகரச்சாரியை, இன்சாரியை, உகரச் சாரியை என
மூன்றும் பெறுமாறும் காண்க. (நன். 248)