உயிரும் மெய்யும் இசை – விளி – பண்டமாற்று – நாவல் – குறிப் பிசை –
முறையீடு – புலம்பல் – முதலாய இடங்களில் தம் மாத் திரையளவினைக் கடந்து
ஒலிக்கும். இசையின் அளவிறந்து ஒலிக்குமிடத்து உயிர் 12 மாத்திரை
ஈறாகவும், மெய் 11 மாத்திரை ஈறாகவும் ஒலிக்கும் என்பர் இசைநூலார்.
நாவல் – நெற்போர் தெழிப்போர் பகட்டினங்களை ஓட்டுவதொரு சொல்.
பண்டமாற்று – பண்டங்களை (விலை கூவி) விற்றல்.
எ-டு :
‘
நாவலோஒஒ என்றிசைக்கும்
நாளோதை’
– நாவல்
‘உப்
போஒஒ எனவுரைத்து மீள்வாள்’ –
பண்டமாற்று
‘கஃஃஃ றென்
னும் கல்லத ரத்தம்’, ‘சுஃஃஃ
றென்னும் தண்தோட்டுப்
பெண்ணை’ – குறிப்பிசை (நன்.
101)
ஆவியும் ஒற்றும் தமக்குச் சொன்ன மாத்திரையின் மிக்கு இசைக்கவும்
பெறும். நாவலும் முறையீடும் புலம்பும் குறிப்பிசையும் முதலாயின
கொள்க.
‘கஃஃ
றென்னும் கல்லதர் அத்தம்’
என்பது குறிப்பிசை.
உயிர் 12 மாத்திரையும் ஒற்று 11 மாத்திரையும் நீளும் என்றார்
கந்தருவநூலுடையார். அவை வந்தவழிக் காண்க. (நன். 100 மயிலை.)