பத்துப்பாட்டுள் இறுதிப்பாட்டாகிய மலைபடுகடாத்தில் 145 ஆம்அடியாகிய ‘தீயி னன்ன ஒண்செங் காந்தள்’ என்றற்கு உரை வரையுமிடத்தே,“இதற்கு நன்னன் என்னும் பெயர் தீயோடு அடுத்த தன்மையின் ஆனந்தமாய்,பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையா சிரியர்கூறினாரால் எனின், அவர் அறியாது கூறினார்…………….. சான்றோர்செய்யுட்கு இக்குற்ற முண்டாயினும் கொள்ளா ரென மறுக்க” என்றுநச்சினார்க்கினியர் குறித்த செய்திக் கண், ‘ஆளவந்த பிள்ளையாசிரியர்’என்பார் பெயர் காணப்படுகிறது. ஆளவந்த பிள்ளையாசிரியர் நச்சினார்க்கினியர்க்கு முற்பட்ட காலத்தவராய், தொல்காப்பியத்தி லன்றிப்பின்னுள்ளோர் செய்த நூல்மரபு பற்றிய நூல்களில் தேர்ச்சி யுடையராய்இருந்தவர் என்பதும்; எழுத்து முதலிய ஆறு வகை ஆனந்தக் குற்றங்களும்பற்றி இலக்கியம் பாட்டின் பாடிய புலவனுக்கும் பாடப்பட்ட பாட்டுடைத்தலைமக னுக்கும் ஏதமுண்டாம் என்று துணிந்தவர் என்பதும்; யாப்பருங்கலவிருத்தியுரையாசிரியர் கொண்ட கருத்தே தம் கருத்தாதலின், பொருளானந்தம்நிகழ வந்தனவாக அவ்வுரை யாசிரியர் குறித்த மலைபடு. 145-150 அடிகளிடையே,145 ஆம் அடிக்கண், ‘இயற்பெயர் மருங்கின் மங்கல மழிய’த் ‘தீயினன்னஒண்செங் காந்தள்’ என்று நன்னன் என்னும் பாட்டுடைத் தலைவனது பெயர்தீயோடு அடுத்து வந்த தன்மையால் சொல்லானந்தக் குற்றம் வந்துற்றமையால்பாடிய புலவனும் பாட்டுடைத் தலைவனும் இறந்துபட்டனர் என்ற துணிவுடையார்என்பதும் புலப்படுகின்றன. இவ் வானந்தக் குற்றங்களைச் சொல்லியவர்குணசாகரர் போன்ற சமணப்புலவர் சிலரே.“பண்டை நூலாகிய தொல்காப்பியம் முதலியவற்றுள் அவை காணப்படாமையின்,சங்கச் சான்றோர் பாடலுள் அவை வரினும் குற்றம் உடையன அல்ல,அப்பாடல்கள்; அன்றியும், இப்பாடற் பகுதிக்கண் ‘நன்னன்’ என்பதுசொல்லன்றி ‘அன்ன’ என்பதே சொல்லாதலானும், ‘நன்ன’ என விளிக்கப்பட்டவிடத்தே “தீப்போன்ற நன்ன!” என்று பொருள்படுமாயினும், ஆண்டுப்படர்க்கையாக வரும் செய்திக்கண் முன்னிலைச் சொல் வருதற்கு இயைபுஇன்மையானும், இவ்வானந்தக் குற்றம் இவ்வடிக்கண் வந்தது என்று சொல்லற்குஇடனில்லை” என்பது நச்சினார்க் கினியரது மறுத்துரை.