இஃது ஆறு ஆராய், இங்குள்ள எடுத்துக்காட்டுப் பாடல் அமைந்தசக்கரவடிவில், நடுவே ரகர ஒற்று நிற்ப, குறட்டைச் சூழத் தா என்னும்எழுத்து நிற்ப, ஆர்மேல் ஏழு எழுத்துக்கள் நிற்ப, சூட்டின்மேல்பன்னிரண்டு எழுத்துக்கள் பெற்று முடிவது; மிறைக்கவி வகைகளுள் ஒன்றானசக்கரத்தின் வகை.எ-டு : ‘பூங்கடம்பி னந்தார்தா நன்று புனைதேனார்கோங்கெழு கொங்கந்தார் தான்பேணு – மோங்குநன்மாக்கோதை மாதவித்தார் தாங்கோட லெண்ணுமாற்பூக்கோதை மாதர்தன் பொற்பு.’இப்பாடலின் சக்கர பந்த அமைப்பினை அமைத்துக் காண்க. குறடு -ஆர்க்கால்களின் அடியிலமைந்த குடத்தின் வளை வான பகுதி.சூடு – வட்டைஆர்க்கால், ஆர், ஆரம், ஆரை – என்பன ஒருபொருட்கிளவி.நடுஆரை நெடுக முதலடியும், அதன்மேல் நின்ற இரண்டு ஆரை நெடுகஇரண்டாம் மூன்றாம் அடியும், நடு ஆரை இணையும் வட்டை வலமாக முழுதும் சூழஈற்றடியும் அமையுமாறு காண்க. நடுவே நின்ற ரகர ஒற்று முதல்மூன்றடிகட்கும் பொதுவாய் நின்றது. ஆறு ஆரைகளும் வட்டையில் இணையும்இடத்து நிற்கும் ஆறெழுத்துக்களும் பொதுவாக நின்று ஈற்றடிக்கு உபகாரப்பட்டமையும் காண்க. (யா. வி. பக். 528)