ஆறன்உருபின் அகரம் கெடும் இடமும் கெடாத இடமும்

யான் – யாம் – நாம் – தான் – தாம் – நீ – என்பன நெடுமுதல்
குறுகி, என் – எம் – நம் – தன் – தம் – நின் – என்றாகி, அகரச்சாரியை
பெற்று, என – எம – நம – தன – தம – நின என்றாயவழி (தொ. எ. 161 நச்.),
வருமொழி முதற்கண் அது என்ற ஆறனுருபு வரின், அவ்வுருபின் அகரம் கெட, என
+ அது
> என + து = எனது
என்றாற்போலப் புணரும். நும் என்பதும் நும் + அது
> நும + து = நுமது எனப்
புணரும். வருமொழி முதற்கண் அகரம் என்ற ஆறனுருபு வரின், அவ்வுருபு
கெடாது, என + அ
> என + வ் + அ = எனவ என்றாற்
போல (இடையே வகரஉடம்படுமெய் பெற்று) அந்நெடுமுதல் குறுகும் சொற்கள்
புணரும். (தொ. எ. 115 நச். உரை.)