ஆர்க்காடு என்னும் ஊர் சோழ மன்னன் சேந்தன் தந்தையாகிய அழிசி என்பவனுக்கு உரியது என்று நற்றிணையும் குறுந்தொகையும் கூறுகின்றன.அகப்பொருள் பற்றிக் கூறும் இவ்விலக்கியங்கள் தலைவியின் நலம் பற்றிக் கூறும் பொழுது ஆர்க்காடு அன்ன நலம் எனப் புகழ்ந்து உரைக்கும் நிலையிலயே ஆர்க்காடு என்ற ஊரைக் குறித்துக் கூறியுள்ளன; ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் என்ற புலவர் பாடிய பாடலொன்று (அகம். 64) சங்க இலக்கியத் தில் உள்ளது. வெள்ளைச் கண்ணத்தனார் என்ற புலவரின் தந்தை ஆர்க்காடு கிழார் என்பவர் ஆர்க்காடு என்ற ஊரினர் எனத் தெரிஒறது, சோழ மன்னனுக்குரிய ஆத்தியைக் குறிக்கும் “ஆர்” என்ற மரத்தால் பெயர் பெற்ற ஊர் ஆர்க்காடு என்பது. ஆத்திமரம் திறைந்திருந்த பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது. ஆர்க்காடு என்ற பெயரே இன்று ஊருக்கும், மாவட்டத்திற்கும் பெயராக வழங்குகிறது. ஆர்க்காடு என்ற பெயருடைய மாவட்டம் வட ஆர்க்காடு மாவட்டம், தென் ஆர்க்காடு மாவட்டம் என இரண்டு பிரிவாக உள்ளது. சங்க இலக்கியம் குறிக்கும் ஆர்க்காடு என்ற பெயருடைய இவ்வூர் வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் உள்ளது. இந்த ஆர்க்காடு கருநாடக நவாபுகள் காலத்தில் அவர்களுடைய தலைநகராக இருந்திருக்கிறது. ஆர்க்காடு என்ற இதனை ஆற்காடு என்று கொண்டு ஆல மரக்காடு என்றும் கருதுகின்றனர். ஆறு காடு அங்கு இருந்தன என்று புராணம் கூற,அது வடமொழியில் ஷடாரண்யம் ஆயிற்று.
“திதலை யெஃகன் சேந்தன் தந்தை
தேங்கமழ் விரிதார் இயல்தோர் அழிசி
வண்டுமூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியலங் கழனி ஆர்க்கா டன்ன” (நற். 190: 3 6)
“பகுமணி யானைப் பசும்பூட்சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்கா டாங்கண்”” (௸. 227 : 5 6)
நிறைய ஒள்வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்கா டன்ன இவன்
பழிதீர் மாணலந் தொலைதல் கண்டே (குறுந். 258 : 6 8)