ஆரியை விருத்தம்

ஆரியா விருத்தம் எனப்படும் ஆரியையும், வைதாளீயம் எனப்படும்வைதாளியையும் மாத்திரைக் கணங்களால் அமையும் விருத்தங்கள். (வீ. சோ.139 உரை)ஆரியைக்கு இலக்கணம் வருமாறு :ஆரியைக்கண் பாதம் நான்கெனக் கொள்வோரும், “பாதங்கள் இல்லை; இரண்டுபாகங்களான முன் அரை (பூர்வார்த்தம்) பின் அரை (உத்தரார்த்தம்) எனஇவையே உள” என்பாரும் என வடமொழியாப்பு நூலார் இருதிறத்தர். தமிழில்வீரசோழிய உரை இரண்டு பாகமெனக் கொண்டே இலக்கணம் கூறும்.மாத்திரை 4 கொண்ட 7 கணங்களும் இறுதியில் ஒரு குருவும் கொண்டு 30மாத்திரைகளில் அமைந்த இரு பாகங்களைப் பெற்று வருவது ஆரியை எனப்படும்.இவற்றுள் ஒற்றைப் படையான 1, 3, 5, 7 என்ற கணங்கள் நடுவில் குருஉடைய‘ஜகணம்’ ஆதல் கூடாது. ஆறாவது கணம் நான்கும் லகுவான கணமோ, இடைக்குருவானஜகணமோ ஆகலாம். பின் அரையில், அஃதாவது இரண்டாம் பாகத்தில் ஒரே லகுவுடையகணமாயிருத்தலும் கூடும்.வீரசோழிய உரை கூறும் ஆரியை மூன்றுவகையெனத் தெளியலாம்.1. மாத்திரைக் கணங்கள் ஏழும் ஈற்றில் ஒரு குருவும் பெற்று, இரண்டாமடியில், ஆறாவது கணம் ஒரு தனி லகு மாத்திரமே வந்த ஆரியை.எ-டு : ‘அம்பொற் கயிலைக் கிறைவாஆகம் பெறாத நோதக வதனாலேவெம்பித் திரிமதி மேவும்பார்வதி யாளா விகாவா யால்.’முதற்பகுதியில் ஆறாவது கணம் நான்கு லகுக்களால் வந்த ஆரியை.எ-டு : ‘இசைமிகு மொழியா ரனையேஅசைவுறு மனமொழி மதுமொழி யாரனையேநசைவுற நீபே துறலேபசையொடு சேருக வாழிய பேதுறலே’3. இரண்டாம் பாதியில் ஆறாவதுகணம் இடைக்குருவான ஜகணமாய் வரும்ஆரியை.எ-டு : ‘அனுபம பண்டித சோழமனுவவ னாகுல மொழிவள வாவருளேஎனவரு வரதா மிகவேஅனவர தமுமுனது தோகை பேதுறுமால்’செய்யுளில் நிறுத்துமிடமே பாதமெனக் கொள்ளும் வகையில், மேலேகாட்டப்பெற்ற மூன்று ஆரியை விருத்தச் செய்யுளுள்ளும், முதற்பாதமும்மூன்றாம் பாதமும் 12 மாத்திரையில் நின்று இறுவதையும், இரண்டாம்பாதமும் நான்காம்பாதமும் நந்நாள் கோணமாய் இறுதி இருபெற்று இறுவதையும்காணலாம்.இனி இந்த ஆரிய விருத்தம் இன்னும் வேறுபல வகையானும் வருவதுண்டு.(வீ. சோ. 139 உரை)