ஆரிடப் போலி

இருடிகள் அல்லாத ஏனையோராகிய, மனத்தது பாடவும் சாவவும் கெடவும்பாடல் தரும் கபில பரண கல்லாட மாமூல பெருந்தலைச்சாத்தர்இத்தொடக்கத்தோராலும், பெருஞ் சித்திரனார் ஒளவையார் பத்தினிஇத்தொடக்கத்தோராலும் ஆரிடச் செய்யுள் போலச் சீர் மிகவும் குறையவும்பாடப் படுவன ஆரிடப் போலிச் செய்யுளாம்.எ-டு : ‘கண்டகம் பற்றிக் கடக மணிதுலங்கஒண்செங் குருதியுள் ஓஒ கிடந்ததே – கெண்டிக்கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள்அழுதகண் ணீர்துடைத்த கை.’இது பத்தினிச் செய்யுள். இந்நேரிசை வெண்பா, இரண்டா மடிநெடிலடியாய்த் தனிச்சீர் பெற்று வந்தது.அறிவுடை நம்பியார் செய்த ‘சிந்தம்’, தனிச்சொல் இல்லாவஞ்சிப்பாவாய், அதற்கு உரித்தல்லாத செவியறிவுறூஉப் பொருண்மைத்தாய்வருதலின் ‘உறுப்பழி செய்யுள்’ எனப்படும்; ஆரிடப் போலி ஆகாது. (யா. க.93 உரை)