ஆய்தஎழுத்தும் ஒற்றும் அளபெடை அல்லாத விடத்துத் தனித்துவரின் அலகுபெறா; ஓர் ஒற்று ஏனைய ஒற்றுக் களொடு சேர்ந்து வரினும் அலகுபெறாது.எ-டு : ‘எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்வெஃஃகு வார்க்கில்லை வீடு’என ஆய்தம் அளபெடுத்தவழி அலகு பெற்றது.‘கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு’என ஒற்று அளபெடுத்தவழி அலகு பெற்றது.பாய்ந்து, பார்த்து, வாழ்ந்தனம்- என்பன ஈரொற்றடுத்த வழியும் அலகுபெறாமை காண்க.ஒற்றும் ஆய்தமும் அளபெழுந்தவழிக் குற்றெழுத்தின் பயத்த வாய் ஓரலகுபெறுவதல்லது, முன்னும் பின்னும் நின்ற எழுத்தினொடு புணர்ந்து நிரையசைஆகா.ஞணநமன வயலள என்னும் பத்து மெய்யும் ஆய்தமும் குறிற்கீழும்குறிலிணைக் கீழும் அளபெழும்.எ-டு : மண்ண்ணு, வரஃஃகு.மண், ண், ணு – நேர் நேர் நேர்வரஃ, ஃ, கு – நிரை நேர் நேர்இவ்வொற்றளபெடை செய்யுள்வழக்கினல்லது உலகு வழக்கில் வாராது. (யா. க.3 உரை)