ஆன்மாச்சிரயம்

இது ‘தன்னைப் பற்றுதல்’ என்னும் குற்றம்.
ஏனைய எழுத்துக்களின் தோற்றத்திற்குக் காரணமாக இருக்கும் அகரம் தன்
தோற்றத்துக்கும் தானே காரணம் என்று கூறுதல் ஆன்மாச்சிரயமாம்.
காரணமும் காரியமும் ஒன்று என்று கொள்ளும் நிலையில் இக் குற்றம்
ஏற்படும். காரணம் முன்னரும் காரியம் பின்னரும் வருதலே முறை. இம்முறையை
விடுத்து இரண்டும் ஒன்றெனல் குற்றமாம். (சூ. வி. பக். 50).