ஒருபஃது இருபஃது…. எண்பஃது என்ற சொற்கள் உருபுக ளொடு
புணருமிடத்து, அச்சொற்களிலுள்ள ‘அஃது’ என்பது கெட, ஆன்சாரியை வர,
ஒருபான் இருபான்… எண்பான் – என நின்று உருபேற்று, ஒருபானை,
ஒருபானொடு ….. எண்பானை – எண்பானொடு – எனப் புணரும். ஒன்பது என்பதும்
ஒன்பான் என ஆன்சாரியை பெற்றுத் திரிந்து, ஒன்பானை – ஒன்பா னொடு என
உருபேற்றுப் புணரும்.
எ-டு : ‘ஒன்பான் முதனிலை’ – (தொ. எ. 463 நச்.)
‘ஒன்பாற்கு ஒற்றிடை மிகுமே’ – (தொ. எ. 475) (தொ. எ. 199
நச்.)
இகர ஐகார ஈற்று நாட்பெயர், தம் முன்னர் வினைச்சொல் வரு மிடத்து
இடையே ஆன்சாரியை பெற்றுப் புணரும்.
எ-டு : பரணியாற் கொண்டான், சித்திரையாற் கொண் டான் (தொ. எ. 247,
286 நச்.)
மகரஈற்று நாட்பெயர் அத்துச் சாரியையோடு ஆன்சாரியை பெற்று
வருமொழியாக வரும் வினைச்சொல்லொடு புணரும்.
எ-டு : மகத்தாற் கொண்டான் (தொ. எ. 331 நச்.)
வினையெனவே, வினைப்பெயரும் அடங்கும்.
பரணியாற் கொண்டவன், சித்திரையாற் கொண்டவன், மகத்தாற் கொண்டவன் எனக்
கொள்க. இவை ஏழாம் வேற்றுமைப் பொருளன.