ஆன்சாரியை, ஆன்உருபு இவற்றிடை வேறுபாடு

ஆன்சாரியை தோன்றியவிடத்து யாதானும் ஓர்உருபினை அஃது ஏற்கும்
ஆற்றலுடையது. எ-டு : ஒருபான் + ஐ = ஒரு பானை; ஒருபான் + கு =
ஒருபாற்கு. ஆன்உருபு தோன்றிய விடத்து அது வேறோர் உருபினை ஏலாது. எ-டு
: வாளான் வெட்டினான், வாணிகத்தான் ஆயினான். (தொ. எ. 119 நச். உரை)