ஆனைமுகத்தானை ‘மும்மதத்தன்’ என்றல்

கழுத்திற்குமேலன்றி யானைஉறுப்பு இல்லாத கடவுள் விநாயகன்.
வேழமுகத்திற்கேற்ப அவனுக்கு இருமதமே உள என்றல் பொருந்தும். மற்று,
‘மும்மதத்தன்’ என்றது எவ்வாறு பொருந்துமெனின், பஞ்சாட்சரத்தின்
பேதமாகிய எட் டெழுத்து – ஆறெழுத்து – நாலெழுத்து – முதலாயினவும்
‘பஞ்சாட்சரம்’ என்றே கூறப்படுதலின், மும்மதத்தின் வகை யாகிய ஒருமதம்
இருமதங்களும் ‘மும்மதம்’ எனப்படுதல் பொருந்தும் என்பது. குற்றியலுகரம்
36 எனத் தொகை கொடுத் தமை, நெடிற்றொடர் முதலிய ஆறனையும் வன்மையூர்
உகரம் (கு சு டு து பு று என்னும்) ஆறனோடு உறழ்தலால் என்க. மயக்க விதி
இன்மையின் இடையின மெய்யினை டகார றகாரங்கள் ஊர்ந்த உகரம் தொடராது
ஆதலின், அவ்விரண் டனையும் விலக்கியே கணக்கிடல் வேண்டும். அவ்வாறு
விலக்காமை, ஆனைமுகத்துக் கடவுளை ‘மும்மதத்தன்’ என்றாற் போன்ற
நியாயத்தின்பாற் பட்டது. (நன். 94 சங்கர.)