ஆத்திரையன் பேராசிரியன்

ஆத்திரைய கோத்திரத்திற் பிறந்த இவர் தொல்காப்பியம் முதலிய நூற்குப்பொருந்த பொதுப்பாயிரம் செய்த ஆசிரியர். (தொ. பொ. 653 பேரா.)இப்பொதுப் பாயிரத்தில் ஈவோன்தன்மை, ஈதல் இயற்கை, கொள்வோன்தன்மை,கோடல்மரபு என்ற நான்கும் விரித் துரைக்கப்பட்டுள்ளன.இப்பொதுப்பாயிரத்துக்கு அரசஞ் சண்முகனார் தம் பேரறிவுடைமை தோன்றவிருத்தியுரை செய்துள்ளார்.