ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்று; சிவ பெருமான் நீங்கலானஆண்பாற்கடவுளரையோ ஆடவருள் மிக்காரையோ குழவியாகக் கருதி அதன்மேலேற்றிக்கூறும் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி,சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்கள் பத்தும்பருவத்திற்குப் பத்துப்பாடலாக ஆசிரியவிருத்தத்தாலும்சந்தவிருத்தத்தாலும் பாடப்பெறுவது இத்தொடர்நிலைச் செய்யுள். காப்புப்பருவத்துள் பத்துப்பாடல் மேலும் சில கூடப்பெறுதலும் உண்டு. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் ஓர் எடுத்துக்காட்டு. (இ. வி. பாட் 46,47)