ஆசு கவி

“இவ்வெழுத்தாலே பாடுக, இச்சொல்லாலே பாடுக, இப்பொருளாலே பாடுக,இவ்யாப்பாலே பாடுக, இவ் வலங்காரத்தாலே பாடுக” என்று ஒருவன் சொன்னஉள்ளுறைக்கு அவனெதிரே அப்பொழுதே பாடுவது. ஆசுகவி பாடும் புலவனும்ஆசுகவியாம். இவற்றில் இரண்டும் மூன்றும் அகப்படப் பாடுதல்சிறப்புடைத்து என்ப. மிக்க புலமைத் திறனோடு இறையருள் வாய்த்தவற்கேஇவ்வாறு பாடுதல் கூடுதலின், இக்கவி முதல்வகையாகக் கூறப்பட்டது.(வெண்பாப். செய். 2., இ.வி.பாட் 4)