ஆசிரிய மண்டில விருத்தம் (1)

கடிநெடிலடி நான்கு ஒத்துவரும் ஆசிரிய விருத்தத்துள், இறுதிச்சீர்வெளிவிருத்தமே போலத் தனிச்சீர் பெற்று வருவது. வெளிவிருத்தம் நெடிலடிநான்காய் இறுதிச்சீர் தனிச்சீராய் நிகழும்; இது கழிநெடிலடி நான்காய்இறுதிச்சீர் தனிச்சீராய் நிகழும். இவ்வளவே தம்முள் வேற்றுமை.எ-டு : ‘புரவுதரு குடியாகிப் புயல்வண்ணன் விரும்பியதூஉம்பொழில்சூழ் காஞ்சிகரியசுடர் வீதிதொறும் உலாப்போந்து கவர்வதூஉம்கலைசூழ் காஞ்சிநிரைவளையிவ் வுலகுய்ய நின்றுதவம் செய்வதூஉம் நிழல்சூழ்காஞ்சிசுரமகளிர் பாடுவதும் பயில்வதூஉம் சொன்மாலை தொடுத்தகாஞ்சி’இவ்வறுசீர் விருத்தம் அடிதோறும் இறுதிச்சீர் ‘காஞ்சி’ எனத்தனிச்சீராய் வந்தமையின், ஆசிரிய மண்டில விருத்தம் ஆம். (வீ. சோ. 122உரை)இனி, அடிமறியாய் வருவனவற்றை ஆசிரிய மண்டில விருத்தம் என வழங்குபஒருசார் ஆசிரியர். (யாதோர் அடியை எடுத்து முதல்நடு இறுதியாகஉச்சரிப்பினும், ஓசையும் பொருளும் கெடாமல் வருவது.)எ-டு: ‘நிலங்கா ரணமாக நீர்க்கங்கை ஏற்றான்;நீண்டதா ளாலாங்கோர் நீர்க்கங்கை ஏற்றான்;தலங்கா ரணமாகச் சங்குவாய் வைத்தான்;தாயலாள் வீயநஞ் சங்குவாய் வைத்தான்;துலங்காச்சீர்த் தானவரைத் துன்னத்தா னட்டான்;துன்னுவார்க் கின்னமிர்தம் தின்னத்தா னட்டான்;இலங்கா புரத்தார்தம் கோமானை எய்தான்;ஏத்தாதார் நெஞ்சத்துள் எஞ்ஞான்றும் எய்தான்.’இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் அடிமறியாய்க் கூறப் படுதலின்,அடிமறிமண்டில ஆசிரிய விருத்தம் ஆம். (யா. க. 77 உரை)