ஆசிரிய நிரைத்தளை

அஃதாவது நிரை ஒன்று ஆசிரியத்தளை; விளச்சீர் நின்றவழி, வரும் சீரின்முதலசை நிரையாக வந்து ஒன்றுவது.எ-டு : ‘அணிநிழ லசோகமர்ந் தருணெறி நடாத்தியமணிதிக ழவிரொளி வரதனைப்பணிபவர் பவநனி பரிசறுப் பவரே’இதன்கண் முழுதும் ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நிரைத்தளை வந்தவாறு.‘திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்விண்ணதிர் இமிழிசை முழங்கப்பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே’இதன்கண், ஒவ்வோரடியிலும் அமைந்த சீர்கள் பெரும் பான்மையும் தம்முள்ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நிரைத்தளை வந்தவாறு. (விசும்பின் விண்ணதிர்;முழங்கப் பண்ணமைந்; தவர்தேர் சென்ற; சென்ற வாறே – இவற்றிடை ஆசிரியநேர்த்தளையே வந்தன.) (யா. க. 19 உரை)