நேர்பு நிரைபு என்ற உரியசைகள் இரண்டும் தம்மொடு தாமும் தம்மொடுபிறவும் மயங்குவதனால் ஆகும் நேர்பு நேர்பு, நிரைபு நிரைபு, நேர்புநிரைபு, நிரைபு நேர்பு என்ற நான்கு சீர்களும் ஆசிரிய உரிச்சீர்களாம்.இவற்றின் வாய்பாடுகள் முறையே வீடுபேறு, தடவுமருது, பாறுகுருகு,வரகுசோறு என்பன.இவையன்றி நேர்பு நிரை, நிரைபு நிரை என்ற இரண்டும் ஆசிரியஉரிச்சீரின் பாற்படும். படவே, ஆசிரிய உரிச்சீர் ஆறு. நேர்பு நிரை :நீடு கொடி, நாணுத்தளை; நிரைபு நிரை : உரறு புலி (குளிறு புலி),விரவுகொடி என்பன. குற்றியலுகர வாய்பாடு ஒன்று, முற்றியலுகரவாய்பாடுஒன்று, என வாய்பாடு முறையே கொள்க.எ-டு : ‘வீற்றுவீற்றுக் கிடப்ப’ (புறநா. 35) – நேர்பு நேர்பு‘இறவுக்கலித்து’ (அகநா. 96) – நிரைபு நிரைபுபூண்டுகிடந்து – நேர்பு நிரைபு‘வசிந்துவாங்கு’ (முருகு. 106) – நிரைபு நேர்புஓங்குமலை, நாணுத்தளை – நேர்பு நிரைகளிற்றுக்கணம், (புறநா. 35) – நிரைபு நிரைஉவவுமதி (புறநா. 3) – நிரைபு நிரை(தொல். செய். 13, 14 நச்.)