ஆசிரிய அடியில், ஆசிரிய உரிச்சீர் வந்து, தளை கொள்ளுங் காலும், 4எழுத்து முதல் 20 எழுத்து முடிய வரையறுக்கப் பட்ட 17 நிலத்தைக் கடந்துவாராது, நேர்பு நிரை – நிரைபு நிரை – என்ற இருசீரும் தளைகொள்ளும்.ஏனைய நேர்பு நேர்பு, நேர்பு நிரைபு – நிரைபு நிரைபு, நிரைபு நேர்புஎன்ற நான்கும் தளை கொள்ளா. உரிச்சீரால் தளை கொள் ளுங்கால், ஓரடியின்இரண்டு உரிச்சீர் வரின் ஓசை உண்ணாது. ஆசிரிய உரிச்சீர் நான்கு நிரலேநிற்குமிடத்தே தூங்கல் ஓசை பிறத்தலின், இயற்சீர்கள் சீர்வகைஅடிகளுக்கு ஒன்று இடையிட்டு வரல் வேண்டும். அப்படி வரினும் இன்னோசைமிகவும் இன்று. நிரையீற்றனவாகிய நேர்புநிரை நிரைபு – நிரை என்றஉரிச்சீர் இரண்டும் இடையில் வாராது அடி முதற்கண்ணே இவற்றுள்ஒன்றுவந்து இயற்சீரொடு தட்டு இன்னோசைத்தாம். அவை ஓரடிக்கு இரண்டுவந்து தட்டாலும் இன்னோசைத்தாம்.‘ ஓங்குகோட்டுத் தொடுத்த பா ம்புபுரை அருவி’ நேர்பு நேர்பு, நேர்பு நிரை.‘ நிவந்துதோன்று களிற்றின் இலங்குகோடு புரைய’ – நிரைபுநேர்பு, நிரைபு நேர்பு-என்று இயற்சீர்கள் ஒன்று இடையிட்ட உரிச்சீரான் ஆசிரியஅடிகள்வந்தன.‘ பாம்புமணி யுமிழும் பானாள் ஈங் குவரல் ’ – நேர்புநிரை, நேர்பு நிரை – இஃது இரண்டு இயற்சீர்இடையிட்டது.‘ ஓங்குமலைப் பெருவில் பாம்புநா ண் கொளீஇ’ (புறநா. 55)‘ உவவுமதி உருவின் ஓங்கல் வெண் குடை’ (புறநா. 3)எனக் கட்டளையடிகள் இன்னோசை பெற்றன.‘ஓங்கு கோட்டுமீது பாய்ந்து பாய்ந்து’ – ஐந்தெழுத்தடி‘ ஆடுகொடி நுடங்கு காடு போந்து’ – ஏழெழுத்தடி(தொ. செய். 54 நச்.)