ஆசிரியப்பா, வெண்பா இவற்றில்முடுகியல் வருதல்

தனிப்பட்ட ஆசிரியப்பா வெண்பாக்களில் நாற்சீர் ஐஞ்சீர் அறுசீர்அடிகள் முடுகி வருதல் இல்லை. கலிக்கு உறுப்பாய் வரும் ஆசிரியம் வெண்பாஇவற்றில் முடுகியல் அடி வருதல் உண்டு.‘நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇத்தகைமிகு தொகைவகை அறியும் சான்றவ ரினமாக’ (கலி. 39)என, கலிக்கு உறுப்பாகிய ஆசிரியச் சுரிதகத்தில் அறுசீரடியும்ஐஞ்சீரடியும் முடுகித் தொடர்ந்து வந்தன.‘தகைவகை மிசைமிசைப் பாயியர் ஆர்த்துடன்எதிரெதிர் சென்றார் பலர்’ (கலி. 102)எனவும்,‘இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர்நீங்கவரிபரி பிறுபிறுபு குடர்சோரக் குத்தித்தன்கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும்வாடில் வெகுளி எழிலேறு கண்டை இஃதொன்றுவெருவரு தூம மெடுப்ப வெகுண்டுதிரிதரும் கொல்களிறும் போன்ம்’ (கலி. 104)எனவும் இவை நாற்சீரடி முடுகியலொடு வந்த வெண்பா.இவ்வெண்பாவுள்,‘வாடில் வெகுளி எழிலேறு கண்டை இஃதொன்று’ என்பது ஐஞ்சீரடி.‘மேனிலை மிடைகழி பிழிபுமேற் சென்றுவேனுதி புரைவிறல் திறனுதி மருப்பின் மாறஞ்சான்பானிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தானைநோனாது குத்தும் இளங்காரித் தோற்றங்காண்பான்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும்நீனிற வண்ணனும் போன்ம்’ (கலி. 104)என ஐஞ்சீரடி முடுகியலோடு ஒன்றாய் வந்த வெண்பா.‘மலர்மலி புகலெழ அலர்மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇஎருத்தோ டிமிலிடைத் தோன்றினன் தோன்றிவருத்தினான் மன்றஇவ் வேறு’ (கலி 102)இஃது அறுசீரடி முடுகியலோடு ஒன்றாய்வந்த வெண்பா. (தொ. செய். 67நச்.)