நேரிசை, இணைக்குறள், நிலைமண்டிலம், அடிமறிமண்டிலம் என ஆசிரியப்பாநால்வகைத்து. வேற்றடி விரவிய ஆசிரியப்பா விரவியல் ஆசிரியம் எனவும்,வேற்றடி விரவாத ஆசிரியப்பா இன்னியல் ஆசிரியம் எனவும் கூறப்பெறும்.(யா. க. 69, 70 உரை)